Saturday 1 April 2017

2வது மாவட்ட செயற்குழு கூட்டம்

31-03-2017 அன்று திருத்துறைப்பூண்டி வசந்த் மஹால் மண்டபத்தில் காலை 1000 மணி முதல் மதியம் 0330 மணிவரை தஞ்சை மாவட்ட BSNL ஊழியர் சங்க 2வது மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர தோழர் D.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் கிளை செயலாளர்களும் கலந்து கொண்டு ஆய்படும்   பொருள் மீது விவாதம் நடத்தினர். மாவட்ட செயலர் தோழர். A.இருதயராஜ் தொகுப்புரை வழங்கினார். மாநில செயலர் தோழர்.A.பாபுராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார் .

மாலை 0500 மணி அளவில்  திருத்துறைப்பூண்டி கிளை செயலாளர் தோழர்.K.காளிதாஸ் பணிநிறைவு பாராட்டுவிழா தோழர் K.T.முருகையன் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. மாநில செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணன், மாநில உதவி பொருளர் தோழர்.R.ஹேந்திரன், BSNLEU, NFTE  மற்றும் அதிகாரிகள் சங்க மாவட்ட, கிளை  உறுப்பினர்களும், கோட்ட பொறியாளர் திரு. ராதாகிருஷ்ணன், துணை கோட்ட பொறியாளர் திரு.ராமச்சந்திரன் உள்பட அதிகாரிகள், ஊழியர்கள், உறவினர்கள்,  நண்பர்கள்  அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறபித்தனர்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

No comments:

Post a Comment